ஞாயிறு, ஜனவரி 15, 2017

கலித்தாழிசை



கலித்தாழிசை ; 1.


நேற்றுவரை நீயிருந்த நேர்ச்சியினை நானிழந்துக்
காற்றடித்துப் போனதுபோல் கலங்குகிறே னென்னுயிரே
ஊற்றெடுத்து வருந்துயரோ ஊருசனம் வம்பளக்கத்
தேற்றவரு வாரின்றித் தெம்பிழந்து நிற்பவளை
ஏற்றமுடன் ஏந்திவிடு ஏக்கமுற நிற்பவளை !

கலித்தாழிசை ; 2.


காத்திருந்து காத்திருந்து கண்ணுறங்க வில்லையடி
பூத்திருக்குங் காதலினால் பூவிழியுன் னெண்ணமடி
காத்திருக்க வேண்டுமெனில் காலமெலாங் காத்திருக்கப்
பூத்திருக்கு காதலெனப் பூவிதழால் புன்னகைத்தா லாகாதோ ?

கருத்துகள் இல்லை: