ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

எண்சீர் விருத்தம் ..



காய் - காய் - மா - தேமா



விண்ணுலகம் மண்ணுலகம் விழிக்கச் செய்ய
... விளக்கேற்றி வருபவனே பகலோன் செல்வன்
கண்ணுறங்கிக் கடல்குளித்துக் காட்டும் காலைக்
... கதிரொளியின் அற்புதங்கள் கொஞ்சம் அல்ல
மண்ணிலிங்கு வாழுகின்ற உயிர்கள் தொட்டு
... மான்புறயிக் கதிரோனின் ஒளியே அன்றி
எண்ணிலிலா இயற்கைஎழில் இருந்தும் மென்ன
... எத்திசைக்கும் திங்களொளி தானே வேண்டும் !


ஒளியளித்த களைப்பினிலே கதிரோன் மெல்ல
... ஒலிகடலில் கால்நனைத்து நடப்பான் பின்னே
களிநடனம் ஆடிஆடி மதியாள் வானில்
... கார்இருளைக் கிழித்துவரத் தன்கை வீசிக்
கிலிதொடுத்த பறவையினம் காக்கை கூட்டம்
... கீச்சிட்டே தானடையும் தத்தம் கூட்டில்
குளிர்நிலவின் இளமையிலே இரவும் துள்ளும்
... குமரியவள் முகம்பார்த்தே மேகம் ஓடும் !

கருத்துகள் இல்லை: