ஞாயிறு, ஜூலை 27, 2014
சனி, ஜூலை 19, 2014
செவ்வாய், ஜூலை 15, 2014
ஞாயிறு, ஜூலை 13, 2014
சனி, ஜூலை 12, 2014
புதன், ஜூலை 09, 2014
திங்கள், ஜூலை 07, 2014
புதன், ஜூலை 02, 2014
வியாழன், ஜூன் 19, 2014
சனி, ஜூன் 14, 2014
புதன், ஜூன் 11, 2014
செவ்வாய், ஜூன் 03, 2014
திங்கள், ஜூன் 02, 2014
சனி, மே 31, 2014
வியாழன், மே 29, 2014
சனி, மே 24, 2014
செவ்வாய், மே 13, 2014
கடல் அன்னை ..
அலையெனப் பொங்கும் ஆழிதரும்
அற்புதம் நமக்குப் பலவாகும்
விலையெனப் போகும் நல்முத்தும்
விளைப்பவள் நமது கடலன்னை
தலைவிரித் தாடிடும் தருணத்தில்
தடல்புடல் என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந் தவளே நின்றாலும்
நிம்மதி தரைக்கும் அவளன்றோ !
பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
தலைகவி ழாதவள் கடலன்னை
இகத்தினில் அலையும் பூங்காற்றும்
இதமாய் அவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே இல்லா தேகசுகம்
நித்தம் தருவதும் கடலன்னை !
அறுசுவை உணவுக் குயிராகும்
ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் நதிகள் வழிந்தோடி
ஆறுதல் அடைவது இவள்மடியில்
நிறைந்தவள் இகத்தினில் முப்பங்கு
நிலத்திடை அளவோ ஒருபங்கு
இளைத்தோர் இறங்கி அள்ளிடத்தான்
இல்லையென்ப தில்லையிந்த கடலன்னை !
அஷ்பா அஷ்ரப் அலி
அற்புதம் நமக்குப் பலவாகும்
விலையெனப் போகும் நல்முத்தும்
விளைப்பவள் நமது கடலன்னை
தலைவிரித் தாடிடும் தருணத்தில்
தடல்புடல் என்றே ஆடிடுவாள்
நிலைகுலைந் தவளே நின்றாலும்
நிம்மதி தரைக்கும் அவளன்றோ !
பகலோன் வண்ணக் கதிர்புணர்ந்து
பெருமழை தருவதும் கடலன்னை
தகவெனக் கொதிக்கும் வெப்பத்தால்
தலைகவி ழாதவள் கடலன்னை
இகத்தினில் அலையும் பூங்காற்றும்
இதமாய் அவள்மேல் படர்ந்துப்பின்
நிகரே இல்லா தேகசுகம்
நித்தம் தருவதும் கடலன்னை !
அறுசுவை உணவுக் குயிராகும்
ஆழிதரும் நல் உப்பாகும்
ஆறுகள் நதிகள் வழிந்தோடி
ஆறுதல் அடைவது இவள்மடியில்
நிறைந்தவள் இகத்தினில் முப்பங்கு
நிலத்திடை அளவோ ஒருபங்கு
இளைத்தோர் இறங்கி அள்ளிடத்தான்
இல்லையென்ப தில்லையிந்த கடலன்னை !
அஷ்பா அஷ்ரப் அலி
புதன், ஏப்ரல் 30, 2014
முருங்கை !!
வேலியோரத்தில்
ஓரக் கண்ணால் பார்த்தபடி
நின்றிருந்தாள்
கூந்தல் நிறைந்த பூக்களோடு
தன்னையே
தானம் செய்து செய்தே
தளர்ந்திருந்தது அவள் மேனி
அள்ளிக் கொடுப்பதில்
மகராசிதான்
அந்த பச்சை உடம்புக்காரி
இன்றும்
சிணுங்கியபடியே நின்றிருந்தாள் !
காய்களையும்
இலைகளையும்
கிள்ளியது யாரென்று தெரியவில்லை
இலைகளையும்
காம்புகளையும்
ஒடிக்கும் விரல்களில்
குத்திவிடும் என்பதற்காக
முட்களை
வேண்டாம் என்று சொன்னவள்
அவளின்
மேனி எங்கும்
மருந்தின் வாடை
முதுகுத் தோலை உரித்தாலும்
புன்னகைப்பாள்
புண்ணியம் என்பதற்காக
தறித்தாலும்
தானாகவே தளிர்த்து
நடமாடத் தெரிந்தவள்
தன்னோடு
வந்து ஒட்டிக் கொள்ளும்
மயிர்ப் புழுக்கள்தான்
எல்லாமுமே என்று சொல்லி
அநாயாசமாகச் சிரிக்கின்றாள் ...
அஷ்பா அஷ்ரப் அலி
ஓரக் கண்ணால் பார்த்தபடி
நின்றிருந்தாள்
கூந்தல் நிறைந்த பூக்களோடு
தன்னையே
தானம் செய்து செய்தே
தளர்ந்திருந்தது அவள் மேனி
அள்ளிக் கொடுப்பதில்
மகராசிதான்
அந்த பச்சை உடம்புக்காரி
இன்றும்
சிணுங்கியபடியே நின்றிருந்தாள் !
காய்களையும்
இலைகளையும்
கிள்ளியது யாரென்று தெரியவில்லை
இலைகளையும்
காம்புகளையும்
ஒடிக்கும் விரல்களில்
குத்திவிடும் என்பதற்காக
முட்களை
வேண்டாம் என்று சொன்னவள்
அவளின்
மேனி எங்கும்
மருந்தின் வாடை
முதுகுத் தோலை உரித்தாலும்
புன்னகைப்பாள்
புண்ணியம் என்பதற்காக
தறித்தாலும்
தானாகவே தளிர்த்து
நடமாடத் தெரிந்தவள்
தன்னோடு
வந்து ஒட்டிக் கொள்ளும்
மயிர்ப் புழுக்கள்தான்
எல்லாமுமே என்று சொல்லி
அநாயாசமாகச் சிரிக்கின்றாள் ...
அஷ்பா அஷ்ரப் அலி
சனி, ஏப்ரல் 26, 2014
வெள்ளி, ஏப்ரல் 25, 2014
இறைவா உன் கருணையினால் ..
விண்ணுலகம் மண்ணுலகம் என்ப தெல்லாம்
வித்தகனே உனதாற்றல் தானே அன்றி
வின்தொடுத்த கோல்களுடன் விடியும் நாட்கள்
வெளிச்சத்தால் வெவ்வேறு கோலம் காட்டி
மண்ணவர்க்கும் மன்வாழும் புழுக்கள் பூச்சி
மெய்தொடுத்த உயிர்கட்கு ஊணும் ஊட்டி
எண்ணிலிலா வளமளித்து இலங்கச் செய்யும்
ஏற்றமிகு நாயன்யார் உன்னை அன்றி !
இறப்பென்றும் பிறப்பென்றும் நிகழ்வ தெல்லாம்
இறைவாஉன் அதிசயத்தில் எண்ணில் ஒன்று
இரவென்றும் பகலென்றும் இயங்கச் செய்து
இருளுலகம் ஒளியுலகம் படைத்துப் பின்னே
நிரலிட்டு நீகாட்டும் அற்பு தங்கள்
நினையாத நெஞ்சங்கள் நித்தி லத்தில்
நிரதியற்று உன்றன்பால் நிற்போர்க் கெல்லாம்
நேர்வழியைக் காட்டிவிடு கருணை கொண்டு !
தென்றலினால் தெம்பளித்தாய் திணறா வண்ணம்
தொல்லையற்ற வாழ்வுமுறை மறையில் வார்த்து
வன்முறையில் வாழ்ந்திடுவோர் வீழ்ந்தோர்க் கெல்லாம்
மென்மனதாய் மன்னிக்கும் வல்லோன் நீயே
நன்னெறியைத் தொடராதோர் நடத்தை கெட்டோர்
என்றின்றி எல்லோர்க்கும் அருளால் அளக்கும்
என்னிறைவா உனதன்பைக் கொண்டே அவரின்
இதயத்தை இலங்கச்செய் உந்தன் ஒளியால் !
அஷ்பா அஷ்ரப் அலி
வித்தகனே உனதாற்றல் தானே அன்றி
வின்தொடுத்த கோல்களுடன் விடியும் நாட்கள்
வெளிச்சத்தால் வெவ்வேறு கோலம் காட்டி
மண்ணவர்க்கும் மன்வாழும் புழுக்கள் பூச்சி
மெய்தொடுத்த உயிர்கட்கு ஊணும் ஊட்டி
எண்ணிலிலா வளமளித்து இலங்கச் செய்யும்
ஏற்றமிகு நாயன்யார் உன்னை அன்றி !
இறப்பென்றும் பிறப்பென்றும் நிகழ்வ தெல்லாம்
இறைவாஉன் அதிசயத்தில் எண்ணில் ஒன்று
இரவென்றும் பகலென்றும் இயங்கச் செய்து
இருளுலகம் ஒளியுலகம் படைத்துப் பின்னே
நிரலிட்டு நீகாட்டும் அற்பு தங்கள்
நினையாத நெஞ்சங்கள் நித்தி லத்தில்
நிரதியற்று உன்றன்பால் நிற்போர்க் கெல்லாம்
நேர்வழியைக் காட்டிவிடு கருணை கொண்டு !
தென்றலினால் தெம்பளித்தாய் திணறா வண்ணம்
தொல்லையற்ற வாழ்வுமுறை மறையில் வார்த்து
வன்முறையில் வாழ்ந்திடுவோர் வீழ்ந்தோர்க் கெல்லாம்
மென்மனதாய் மன்னிக்கும் வல்லோன் நீயே
நன்னெறியைத் தொடராதோர் நடத்தை கெட்டோர்
என்றின்றி எல்லோர்க்கும் அருளால் அளக்கும்
என்னிறைவா உனதன்பைக் கொண்டே அவரின்
இதயத்தை இலங்கச்செய் உந்தன் ஒளியால் !
அஷ்பா அஷ்ரப் அலி
புதன், ஏப்ரல் 23, 2014
நூல்களை நேசி !!
பூக்களாய்
சிதறிக் கிடக்கும்
புத்தகப் பந்தலில்
கொஞ்சம் கிடந்து பார்
வாசிப்பின் வசீகரம்
உன்னை எட்டிப் பிடிக்கும்
நல்ல நல்ல நூல்களோடும்
தொடர்பு வை நீ
திக்கித் திக்கி எழுதும்
வார்த்தைகள் கூட
உனக்கு அடிமையாகும்
வாசிப்பின் வாசம் புரிய
சுவாசிக்கும் நீ
வாசிப்போடும் நட்பு கொள்
உன்னோடு
கை கோர்த்து நடந்து வரும்
வசப்படாத
வார்த்தைகளும்
உனக்குள் பிரசவமாகும்
வாசிப்பின் வசியம் புரிந்தால்
வார்த்தைக் குழப்பத்தில்
வழுக்கி வழுக்கி விழுகிறாயா
வாசிப்பு மழையில்
நனைந்து பார்
அறிமுகமில்லாத
சொற்கள் எல்லாம்
உன் நெஞ்சில் கிடந்து
ஊஞ்சல் ஆடும் ..
-- அஷ்பா அஷ்ரப் அலி -- ( ஏப்ரல் 23 உலக புத்தக தினம் )
சிதறிக் கிடக்கும்
புத்தகப் பந்தலில்
கொஞ்சம் கிடந்து பார்
வாசிப்பின் வசீகரம்
உன்னை எட்டிப் பிடிக்கும்
நல்ல நல்ல நூல்களோடும்
தொடர்பு வை நீ
திக்கித் திக்கி எழுதும்
வார்த்தைகள் கூட
உனக்கு அடிமையாகும்
வாசிப்பின் வாசம் புரிய
சுவாசிக்கும் நீ
வாசிப்போடும் நட்பு கொள்
உன்னோடு
கை கோர்த்து நடந்து வரும்
வசப்படாத
வார்த்தைகளும்
உனக்குள் பிரசவமாகும்
வாசிப்பின் வசியம் புரிந்தால்
வார்த்தைக் குழப்பத்தில்
வழுக்கி வழுக்கி விழுகிறாயா
வாசிப்பு மழையில்
நனைந்து பார்
அறிமுகமில்லாத
சொற்கள் எல்லாம்
உன் நெஞ்சில் கிடந்து
ஊஞ்சல் ஆடும் ..
-- அஷ்பா அஷ்ரப் அலி -- ( ஏப்ரல் 23 உலக புத்தக தினம் )
வியாழன், ஏப்ரல் 17, 2014
வேண்டாம் இனவாதம் !
அவனிவந்த மதங்கள் எல்லாம்
அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
அமைதி கண்டது - எங்கும்
இமைகள் திறந்தது
தவமிருந்து வளர்ந்த மதம்
தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
தனித்து வளருது - ஏனோ
தொனியைத் தூக்குது
வேதமோதும் குருக்கள் இங்கு
வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
வாசம் வருகுது - எங்கோ
மோசம் நடக்குது
பிணங்கள் உண்ணும் மிருகமாகி
போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
பகையை வளர்க்கிறான் - ஊதி
புகையை வார்க்கிறான்
உயர்ந்து நிற்கும் வேதமிதும்
உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
உணரும் நாள்வரும் - கூட
திணறும் நாள்வரும்
இன்னல் படும் இனத்தவரே
இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
சிந்தி நிற்பதேன்
வேதம் சொன்ன வாக்குகளில்
வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
வளைந்து நிற்பதேன் - நிலையில்
குலைந்து நிற்பதேன்
அஷ்பா அஷ்ரப் அலி
அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
அமைதி கண்டது - எங்கும்
இமைகள் திறந்தது
தவமிருந்து வளர்ந்த மதம்
தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
தனித்து வளருது - ஏனோ
தொனியைத் தூக்குது
வேதமோதும் குருக்கள் இங்கு
வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
வாசம் வருகுது - எங்கோ
மோசம் நடக்குது
பிணங்கள் உண்ணும் மிருகமாகி
போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
பகையை வளர்க்கிறான் - ஊதி
புகையை வார்க்கிறான்
உயர்ந்து நிற்கும் வேதமிதும்
உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
உணரும் நாள்வரும் - கூட
திணறும் நாள்வரும்
இன்னல் படும் இனத்தவரே
இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
சிந்தி நிற்பதேன்
வேதம் சொன்ன வாக்குகளில்
வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
வளைந்து நிற்பதேன் - நிலையில்
குலைந்து நிற்பதேன்
அஷ்பா அஷ்ரப் அலி
புதன், ஏப்ரல் 09, 2014
வெண்ணிறத்துக் கன்னி !
வார்த்தெடுத்த வனப்பினிலே வடிவழகைக் காட்டி
வான்பரப்பில் வளம்வருவாள் வெண்ணிறத்துக் கன்னி
நேர்த்தியுடன் நித்திலத்தில் நிலவொளியாய் வீச
நீல்கடலில் குளித்தெழுவாள் நித்தமிந்த கள்ளி !
பார்தொடுத்த இடத்திலெல்லாம் பகலவனைப் போல
பனிஇரவில் பாய்விரிப்பாள் தன்னொளியை ஈந்து
ஆர்ப்பரிக்கும் ஆவலினால் நாணம்வரும் வேளை
நாணியவள் முகமறைப்பாள் மேகத்திரைத் தொட்டு !
காலையிளம் பனியினிலே கால்கழுகிப் பின்னே
கதிரவனைக் காணுமுன்னே நழுவிடுவாள் மெல்ல
சோலைக்கிளிக் கூட்டமெல்லாம் கூடி ; அவள்
சார்ந்திருந்த சோகத்திலே கீதமெனப் பாட !
வேளையிது விடியலெனச் சேவல்களும் கூவும்
வாடிநின்ற பயிரும்புல்லும் எழுந்துநின்று வாழ்த்தும்
மாலைவரை காத்திருக்க கண்கலங்கி நின்ற
மங்கையந்த வெண்ணிலவாள் மனமிழந்து நடப்பாள் !
அஷ்பா அஷ்ரப் அலி
வான்பரப்பில் வளம்வருவாள் வெண்ணிறத்துக் கன்னி
நேர்த்தியுடன் நித்திலத்தில் நிலவொளியாய் வீச
நீல்கடலில் குளித்தெழுவாள் நித்தமிந்த கள்ளி !
பார்தொடுத்த இடத்திலெல்லாம் பகலவனைப் போல
பனிஇரவில் பாய்விரிப்பாள் தன்னொளியை ஈந்து
ஆர்ப்பரிக்கும் ஆவலினால் நாணம்வரும் வேளை
நாணியவள் முகமறைப்பாள் மேகத்திரைத் தொட்டு !
காலையிளம் பனியினிலே கால்கழுகிப் பின்னே
கதிரவனைக் காணுமுன்னே நழுவிடுவாள் மெல்ல
சோலைக்கிளிக் கூட்டமெல்லாம் கூடி ; அவள்
சார்ந்திருந்த சோகத்திலே கீதமெனப் பாட !
வேளையிது விடியலெனச் சேவல்களும் கூவும்
வாடிநின்ற பயிரும்புல்லும் எழுந்துநின்று வாழ்த்தும்
மாலைவரை காத்திருக்க கண்கலங்கி நின்ற
மங்கையந்த வெண்ணிலவாள் மனமிழந்து நடப்பாள் !
அஷ்பா அஷ்ரப் அலி
செவ்வாய், ஏப்ரல் 08, 2014
திங்கள், ஏப்ரல் 07, 2014
எழுந்து விடு !
துணிந்திடு வாழ்வினில் துயரமில்லை
தூயவர் நட்பினில் துன்பமில்லை
கனிந்திடும் அன்பும் நிலைப்பதில்லை
காமுக நட்பும் வளர்வதில்லை !
அணிகளாய் இணைந்திட யாருமில்லை
ஆத்திரம் மட்டும் குறைவதில்லை
தனிநபர் கூக்குரல் கேட்பதில்லை
தெருமுனை வரையும் வருவதில்லை !
அணிகலன் ஆடையில் கவர்ச்சியில்லை
அணிந்தவர் நெஞ்சிலும் ஈரமில்லை
பணிந்திடு எவர்க்கும் தவறுமில்லை
பாரினில் சிறப்பென வாழ்வதற்கு !
மலர்ந்திடும் பூக்களும் மணப்பதில்லை
வளர்ந்திடும் மரங்களும் காய்ப்பதில்லை
வளர்ந்திட உனக்கொரு பாதையில்லை
உயர்ந்திட உழைத்திடு கவலையில்லை !
அளந்தது உன்னை இழப்பதில்லை
அளவிலும் நிறைவிலும் குறைவதில்லை
தளர்ந்திடும் தேகம் பொறுப்பதில்லை
தடைவரும் முன்னே எழுந்துவிடு !!
அஷ்பா அஷ்ரப் அலி
தூயவர் நட்பினில் துன்பமில்லை
கனிந்திடும் அன்பும் நிலைப்பதில்லை
காமுக நட்பும் வளர்வதில்லை !
அணிகளாய் இணைந்திட யாருமில்லை
ஆத்திரம் மட்டும் குறைவதில்லை
தனிநபர் கூக்குரல் கேட்பதில்லை
தெருமுனை வரையும் வருவதில்லை !
அணிகலன் ஆடையில் கவர்ச்சியில்லை
அணிந்தவர் நெஞ்சிலும் ஈரமில்லை
பணிந்திடு எவர்க்கும் தவறுமில்லை
பாரினில் சிறப்பென வாழ்வதற்கு !
மலர்ந்திடும் பூக்களும் மணப்பதில்லை
வளர்ந்திடும் மரங்களும் காய்ப்பதில்லை
வளர்ந்திட உனக்கொரு பாதையில்லை
உயர்ந்திட உழைத்திடு கவலையில்லை !
அளந்தது உன்னை இழப்பதில்லை
அளவிலும் நிறைவிலும் குறைவதில்லை
தளர்ந்திடும் தேகம் பொறுப்பதில்லை
தடைவரும் முன்னே எழுந்துவிடு !!
அஷ்பா அஷ்ரப் அலி
ஞாயிறு, ஏப்ரல் 06, 2014
மனிதம் மட்டும் ..
ஆற்றின் கரையினில் ஆட்டமிடும் - நாணல்
அழுது புலம்பி நிற்பதில்லை
சேற்றில் பிறந்தே வளர்ந்தாலும் - நாற்று
சோற்றின் உரிமை கேட்பதில்லை
காற்றே உயிர்களின் பிரதானம் - தலைக்
கனத்தால் அதுவும் சுழல்வதில்லை
ஊற்றாய்ப் பெருகும் ஆவலினால் - இங்கு
உழலுவ தேனோ மனிதஇனம்
நாட்களின் இணைப்பே ஆண்டாகும் - நன்றே
நாட்களைக் கழிப்போர் யாருமில்லை
பாற்கடல் என்றன் மனதென்போர் - பாவப்
பாறைதன் நெஞ்சென நினைப்பதில்லை
தேற்றிடத் தகுந்தோர் கண்முன்னே - கண்டும்
ஊட்டிட எவரும் இங்கில்லை
தேற்றா திருந்தால் கவலை யில்லை - தூற்றித்
துரத்துவ தொன்றே என்கவலை
-- அஷ்பா அஷ்ரப் அலி --
அழுது புலம்பி நிற்பதில்லை
சேற்றில் பிறந்தே வளர்ந்தாலும் - நாற்று
சோற்றின் உரிமை கேட்பதில்லை
காற்றே உயிர்களின் பிரதானம் - தலைக்
கனத்தால் அதுவும் சுழல்வதில்லை
ஊற்றாய்ப் பெருகும் ஆவலினால் - இங்கு
உழலுவ தேனோ மனிதஇனம்
நாட்களின் இணைப்பே ஆண்டாகும் - நன்றே
நாட்களைக் கழிப்போர் யாருமில்லை
பாற்கடல் என்றன் மனதென்போர் - பாவப்
பாறைதன் நெஞ்சென நினைப்பதில்லை
தேற்றிடத் தகுந்தோர் கண்முன்னே - கண்டும்
ஊட்டிட எவரும் இங்கில்லை
தேற்றா திருந்தால் கவலை யில்லை - தூற்றித்
துரத்துவ தொன்றே என்கவலை
-- அஷ்பா அஷ்ரப் அலி --
செவ்வாய், ஏப்ரல் 01, 2014
தீயெனச் சுடுவதெல்லாம் ...
ஆழ்கடலில் முத்தெடுக்க குளிப்போர் எல்லாம்
ஆனந்தம் கண்டதில்லை அவர்தம் வாழ்வில்
ஏழ்மையெனும் இடுக்கினிலே விழுந்தோர் எல்லாம்
எழுந்திருப்ப தெப்போதோ அலறல் தினமும் !
சூழ்நிலையே சீர்திருத்தம் காணச் செய்யும்
சேர்ந்திருப்போர் காட்டுகின்ற கபடப் போக்கில்
ஊழ்வினையால் நிறைந்திட்ட உலகம் என்று
உருப்படத்தான் போகிறதோ தெரியா தய்யா !
சூழ்ந்துஎழும் துயரத்தைக் காண்போர் நிதமும்
சோர்வடைந்து வாழுகிறார் சரிதான் ஆனால்
பாழ்படுத்தும் விலைவாசி ஏற்றங் கண்டு
பதறாதோர் பாரினிலே எவர்தான் உண்டு !
கால்தடுக்கி வாழ்வினிலே கவிழ்ந்தோர் இங்கு
கணிசம்தான் என்றாலும் காதல் தொல்லை
நூல்தொடுத்து வளருவதால் நம்மில் வாழ்வோர்
நாரெனவே கிழிந்தவர்தான் நூற்றில் பாதி !
ஆல்தொடுத்த விழுதுகளாய் ஆயிரம்தான் ஆனாலும்
அன்பிழந்த உறவுகளே ஆங்காங்கு வாழ
தேள்நிறைந்த விசமதுபோல் தேகம்நிறை நஞ்சில்
தோல்கொடுத்து வாழுவதாய் காட்டுவதே புதுமை !
அஷ்பா அஷ்ரப் அலி
ஆனந்தம் கண்டதில்லை அவர்தம் வாழ்வில்
ஏழ்மையெனும் இடுக்கினிலே விழுந்தோர் எல்லாம்
எழுந்திருப்ப தெப்போதோ அலறல் தினமும் !
சூழ்நிலையே சீர்திருத்தம் காணச் செய்யும்
சேர்ந்திருப்போர் காட்டுகின்ற கபடப் போக்கில்
ஊழ்வினையால் நிறைந்திட்ட உலகம் என்று
உருப்படத்தான் போகிறதோ தெரியா தய்யா !
சூழ்ந்துஎழும் துயரத்தைக் காண்போர் நிதமும்
சோர்வடைந்து வாழுகிறார் சரிதான் ஆனால்
பாழ்படுத்தும் விலைவாசி ஏற்றங் கண்டு
பதறாதோர் பாரினிலே எவர்தான் உண்டு !
கால்தடுக்கி வாழ்வினிலே கவிழ்ந்தோர் இங்கு
கணிசம்தான் என்றாலும் காதல் தொல்லை
நூல்தொடுத்து வளருவதால் நம்மில் வாழ்வோர்
நாரெனவே கிழிந்தவர்தான் நூற்றில் பாதி !
ஆல்தொடுத்த விழுதுகளாய் ஆயிரம்தான் ஆனாலும்
அன்பிழந்த உறவுகளே ஆங்காங்கு வாழ
தேள்நிறைந்த விசமதுபோல் தேகம்நிறை நஞ்சில்
தோல்கொடுத்து வாழுவதாய் காட்டுவதே புதுமை !
அஷ்பா அஷ்ரப் அலி
வியாழன், மார்ச் 27, 2014
மேன்மையில் பிறந்த ...
நீரிடை நெளியும் புழுவும்
நிலத்தடி வாழும் எறும்பும்
தேனடை ஒழுகும் தேனின்
தேம்பலில் குளிக்கும் தேனீ
கானிடை திரியும் விலங்கும்
கடலினில் வாழும் மீனும்
ஊணினைத் தேடி உழைக்கும்
உயிர்களின் நியதி அதுவே !
வீணென வாழ்ந்திட எதுவும்
உலகினில் பிறப்பது மில்லை
வீண்பகை கொண்டே எந்த
உயிரினம் வாழ்வது மில்லை
மேன்மையின் பிறப்பே மனிதன்
மாள்வது மாயையின் கனவில்
தாண்டவ மாடிடும் பகைமை
தனக்கென கொண்டவன் இவனே !
அஷ்பா அஷ்ரப் அலி
நிலத்தடி வாழும் எறும்பும்
தேனடை ஒழுகும் தேனின்
தேம்பலில் குளிக்கும் தேனீ
கானிடை திரியும் விலங்கும்
கடலினில் வாழும் மீனும்
ஊணினைத் தேடி உழைக்கும்
உயிர்களின் நியதி அதுவே !
வீணென வாழ்ந்திட எதுவும்
உலகினில் பிறப்பது மில்லை
வீண்பகை கொண்டே எந்த
உயிரினம் வாழ்வது மில்லை
மேன்மையின் பிறப்பே மனிதன்
மாள்வது மாயையின் கனவில்
தாண்டவ மாடிடும் பகைமை
தனக்கென கொண்டவன் இவனே !
அஷ்பா அஷ்ரப் அலி
புதன், மார்ச் 26, 2014
சனி, மார்ச் 22, 2014
துடித்தெழு !!
வாழ்கையின் விளிம்பில் நின்று
வழுக்கியே வீழும் போது
தாழ்வினில் கிடக்கும் மனிதன்
தனக்கென கொண்ட வாக்கில்
வாழ்வினில் எல்லா மிங்கு
வருவது பொதுவே வென்று
தோல்வியைத் தனக்குத் தானே
தேற்றிடக் காண்போ மிங்கு !
வெண்பனித் தூங்குங் காலை
விடியலே கண் திறக்க
எண்ணிலா பறவை எல்லாம்
எழுந்தவர் இரையைத் தேட
கண்படும் தூர மெல்லாம்
காரியம் பல விருக்க
முன்கடன் பின் கடன்போல்
முடங்கியே இவன் கிடப்பான் !
அல்லலே அல்லல் என்று
அகத்தினில் கிடந்தா லொன்றும்
இல்லவே இல்லை என்றும்
இகத்தினில் ஈடு னக்கு
தொல்லைகள் சூழும் முன்னால்
துடித்தெழு வில்லாய் வளை
எல்லையே அற்ற இன்பம்
இனியுனக் கென்றே உணர் !!
அஷ்பா அஷ்ரப் அலி
வழுக்கியே வீழும் போது
தாழ்வினில் கிடக்கும் மனிதன்
தனக்கென கொண்ட வாக்கில்
வாழ்வினில் எல்லா மிங்கு
வருவது பொதுவே வென்று
தோல்வியைத் தனக்குத் தானே
தேற்றிடக் காண்போ மிங்கு !
வெண்பனித் தூங்குங் காலை
விடியலே கண் திறக்க
எண்ணிலா பறவை எல்லாம்
எழுந்தவர் இரையைத் தேட
கண்படும் தூர மெல்லாம்
காரியம் பல விருக்க
முன்கடன் பின் கடன்போல்
முடங்கியே இவன் கிடப்பான் !
அல்லலே அல்லல் என்று
அகத்தினில் கிடந்தா லொன்றும்
இல்லவே இல்லை என்றும்
இகத்தினில் ஈடு னக்கு
தொல்லைகள் சூழும் முன்னால்
துடித்தெழு வில்லாய் வளை
எல்லையே அற்ற இன்பம்
இனியுனக் கென்றே உணர் !!
அஷ்பா அஷ்ரப் அலி
வியாழன், மார்ச் 20, 2014
நீ அறிவாயோ !!
கடற்கரை மணலில் காலாற - சற்று
களைப்பினை தீர்க்க நடந்திடநீ
படர்ந்துள மனதின் கவலையெலாம் - நொடிப்
பொழுதினில் மாறுவ தறிவாயோ
விடலைகள் காணும் கனவெல்லாம் - வெறும்
ஒளியென வந்தே மறைந்துவிடும்
கடலென பொங்கும் ஆசைகளில் - இங்கு
கவிழ்ந்தவர் கோடி அறிவாயோ
படலையின் கண்ணில் பாவையர்கள் - வெறும்
பார்வையி னாலே பசியாற
இடர்துடைத் தவரின் கைகோர்க்க - நம்
மிளைஞரிங் கில்லை அறிவாயோ
ஆடவர் அன்பினில் தாரமதும் - அவள்
அருகினில் கிடந்தே அளைந்தவனும்
தேடலில் தரித்திரத் துணைதேடி - வாழ்வை
தொலைத்தவர் ஆயிரம் அறிவாயோ
தடமெனப் பதிந்த துயரெல்லாம் - தம்
தலையினில் கிடந்து சிணுங்குகையில்
திடமுடன் உருகித் தம்மிறையை - தலை
வணங்கிட நிம்மதி அறிவாயோ
-- அஷ்பா அஷ்ரப் அலி --
களைப்பினை தீர்க்க நடந்திடநீ
படர்ந்துள மனதின் கவலையெலாம் - நொடிப்
பொழுதினில் மாறுவ தறிவாயோ
விடலைகள் காணும் கனவெல்லாம் - வெறும்
ஒளியென வந்தே மறைந்துவிடும்
கடலென பொங்கும் ஆசைகளில் - இங்கு
கவிழ்ந்தவர் கோடி அறிவாயோ
படலையின் கண்ணில் பாவையர்கள் - வெறும்
பார்வையி னாலே பசியாற
இடர்துடைத் தவரின் கைகோர்க்க - நம்
மிளைஞரிங் கில்லை அறிவாயோ
ஆடவர் அன்பினில் தாரமதும் - அவள்
அருகினில் கிடந்தே அளைந்தவனும்
தேடலில் தரித்திரத் துணைதேடி - வாழ்வை
தொலைத்தவர் ஆயிரம் அறிவாயோ
தடமெனப் பதிந்த துயரெல்லாம் - தம்
தலையினில் கிடந்து சிணுங்குகையில்
திடமுடன் உருகித் தம்மிறையை - தலை
வணங்கிட நிம்மதி அறிவாயோ
-- அஷ்பா அஷ்ரப் அலி --
புதன், மார்ச் 19, 2014
பிடித்திருந்தால் சொல்லு ..
கண்களினால் கலகம்செய்து
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை
ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
விளைவதுண்மை பித்து
பூவிழியால் இழுத்துவைத்து
பிழிந்ததெல்லாம் போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்து
பிடித்திருந்தால் சொல்லு
இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு ...
-- அஷ்பா அஷ்ரப் அலி --
கட்டிவைத்தாய் என்னை - என்
கருவிழியில் கிடப்பதனால்
தொட்டிலிட்டேன் உன்னை
ஆவலினால் காதல்செய்து
அலையுதடி மனசு - தினம்
ஆளுகின்ற உன்னினைவால்
விளைவதுண்மை பித்து
பூவிழியால் இழுத்துவைத்து
பிழிந்ததெல்லாம் போதும் - உன்
பூவிதழால் புன்னகைத்து
பிடித்திருந்தால் சொல்லு
இளநெஞ்சில் கிடந்தபடி
இடிப்பவளே நில்லு - உனை
இழப்பதெனில் சம்மதமே
இயலுமெனில் கொல்லு ...
-- அஷ்பா அஷ்ரப் அலி --
செவ்வாய், மார்ச் 18, 2014
வெள்ளி, மார்ச் 14, 2014
வியாழன், மார்ச் 13, 2014
செவ்வாய், மார்ச் 11, 2014
எப்பக்கம் திரும்புவது ?
அகிலத்தின் அதிபதியே உன்னை அன்றி
அருளாளன் எமக்கிங்கு யார்தான் உண்டு
முகிழ்க்கின்ற துன்பங்கள் முடிச் சவிழ்த்து
முனைவின்றி எமையிங்கு காத் தருள்வாய்
வேதித்தார் தரணியிலே வினயம் கொண்டு
வேற்றுமுனை உருவாகும் நிலையை மாற்றி
தாகித்தே உந்தன்பால் தர்க்கம் பண்ணத்
தவித்திடுவோர் நெஞ்சத்தை குளிரச் செய்வாய்
வேதத்தின் வாய்மையினை உணர்ந்தோர் இங்கு
வாதத்தில் வாழுகிறார் வாய்மை மாற்றி
ஆதன்போல் அறிந்தோரால் அல்லல் எங்கும்
ஆளாளுக் கொன்றொன்று சொல்லும் சொல்லால்
வாதாடி வாதாடி வாசல் தோறும்
வெவ்வேறு சின்னங்கள் உந்தன் பெயரால்
ஏதேனும் ஓர்வழியில் செல்லச் சொல்லும்
என்மனதை எப்படித்தான் தேற்றிக் கொள்வேன் ...
அஷ்பா அஷ்ரப் அலி
அருளாளன் எமக்கிங்கு யார்தான் உண்டு
முகிழ்க்கின்ற துன்பங்கள் முடிச் சவிழ்த்து
முனைவின்றி எமையிங்கு காத் தருள்வாய்
வேதித்தார் தரணியிலே வினயம் கொண்டு
வேற்றுமுனை உருவாகும் நிலையை மாற்றி
தாகித்தே உந்தன்பால் தர்க்கம் பண்ணத்
தவித்திடுவோர் நெஞ்சத்தை குளிரச் செய்வாய்
வேதத்தின் வாய்மையினை உணர்ந்தோர் இங்கு
வாதத்தில் வாழுகிறார் வாய்மை மாற்றி
ஆதன்போல் அறிந்தோரால் அல்லல் எங்கும்
ஆளாளுக் கொன்றொன்று சொல்லும் சொல்லால்
வாதாடி வாதாடி வாசல் தோறும்
வெவ்வேறு சின்னங்கள் உந்தன் பெயரால்
ஏதேனும் ஓர்வழியில் செல்லச் சொல்லும்
என்மனதை எப்படித்தான் தேற்றிக் கொள்வேன் ...
அஷ்பா அஷ்ரப் அலி
ஞாயிறு, மார்ச் 02, 2014
மூக்குத்தி ( குறும்பா )
கண்ணுக்குள்ளே கிடப்பவளே ராசாத்தி
கன்னத்திலே குத்துதென்றேன் மூக்குத்தி
கனன்றுவந்த வேளையிலும்
கழற்றிவைத்தாள் மின்னலென
கிண்ணத்திலே மூக்குத்தியை வெட்கத்தில் !
அஷ்பா அஷ்ரப் அலி
கன்னத்திலே குத்துதென்றேன் மூக்குத்தி
கனன்றுவந்த வேளையிலும்
கழற்றிவைத்தாள் மின்னலென
கிண்ணத்திலே மூக்குத்தியை வெட்கத்தில் !
அஷ்பா அஷ்ரப் அலி
சனி, மார்ச் 01, 2014
வெள்ளி, பிப்ரவரி 28, 2014
பொன்னழகு பூத்திருப்பாள் !!
நித்திலத்தின் நிறைவாழ்வோ நேசத்தின் நிறைகுடமோ
சித்திரமாய் சிலைவடிவாய் செங்கமலக் காரிகையாள்
உத்திகொண்டு போராடிப் பொற்கொடியின் கைகோர்க்க
மெத்தவுந்தான் பாடெனக்கு முத்திவிடும் பித்தெனெக்கு ..
சிற்றிடையோ சிறுகொடியோ சிணுசிணுத்த செந்தேகம்
செங்கனியின் செழிப்பினிலே செவ்வானம் செயலிழக்கும்
பொற்கிளியின் பூவிதழில் பூவாடை புன்னகைக்கும்
பொலிவென்றால் பொலிவதுவே பொன்னழகு பூத்திருக்கும் ..
இத்தளத்தில் இவள்போல இன்னொருத்தி கிடைப்பாளோ
இல்லாளாய் என்னுள்ளம் இனியொருபெண் இணைவாளோ
சுத்தமுள்ள எண்ணமுண்டு சத்தியத்தில் வாழ்வுமுண்டு
சேர்த்துவிடப் பெரியோரே சார்ந்திடுவீர் என்கூட ..
அஷ்பா அஷ்ரப் அலி
சித்திரமாய் சிலைவடிவாய் செங்கமலக் காரிகையாள்
உத்திகொண்டு போராடிப் பொற்கொடியின் கைகோர்க்க
மெத்தவுந்தான் பாடெனக்கு முத்திவிடும் பித்தெனெக்கு ..
சிற்றிடையோ சிறுகொடியோ சிணுசிணுத்த செந்தேகம்
செங்கனியின் செழிப்பினிலே செவ்வானம் செயலிழக்கும்
பொற்கிளியின் பூவிதழில் பூவாடை புன்னகைக்கும்
பொலிவென்றால் பொலிவதுவே பொன்னழகு பூத்திருக்கும் ..
இத்தளத்தில் இவள்போல இன்னொருத்தி கிடைப்பாளோ
இல்லாளாய் என்னுள்ளம் இனியொருபெண் இணைவாளோ
சுத்தமுள்ள எண்ணமுண்டு சத்தியத்தில் வாழ்வுமுண்டு
சேர்த்துவிடப் பெரியோரே சார்ந்திடுவீர் என்கூட ..
அஷ்பா அஷ்ரப் அலி
வியாழன், பிப்ரவரி 27, 2014
கண்கெட்டுக் கிடக்குதடா !!
கண்கெட்டு கிடக்குதடா உலகம் - காணும்
களமெல்லாம் நடக்குதடா கலகம்
கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
கோளாறு இருக்கும்வரை உறுதி ..
உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்
எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு ..
கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்
புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
புழுதிவாரிப் போட்டோரும் உண்டு ..
ஆகாது என்றாலும் தேகம் - தினம்
காணாது என்றலறும் போகம்
வேகாது வாழ்வோர்க்கும் ஆசை - வெந்து
வேக்காடு ஆனோர்க்கும் ஆசை ...
அஷ்பா அஷ்ரப் அலி
களமெல்லாம் நடக்குதடா கலகம்
கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
கோளாறு இருக்கும்வரை உறுதி ..
உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்
எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு ..
கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்
புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
புழுதிவாரிப் போட்டோரும் உண்டு ..
ஆகாது என்றாலும் தேகம் - தினம்
காணாது என்றலறும் போகம்
வேகாது வாழ்வோர்க்கும் ஆசை - வெந்து
வேக்காடு ஆனோர்க்கும் ஆசை ...
அஷ்பா அஷ்ரப் அலி
செவ்வாய், பிப்ரவரி 25, 2014
அன்றலர்ந்த தாமரையோ நீ !!
அன்றலர்ந்த தாமரையோ - அன்றி
அணிலளைந்த செங்கனியோ
கன்றிழந்த காளையைபோல் - எதைநீ
கண்சுழற்றி தேடுகிறாய் !
வண்டினங்கள் வாசல்வழி - தினமும்
வந்துவந்து போகுதடி
பண்பிழந்து போகுமென்றால் - மனசு
புண்தொடுத்து வேகுமடி !
காலமுன்னைக் கொல்லுதென்றால் - நீ
கண்ணசைத்து சொல்லுபுள்ள
ஆதவனைப் போலயிங்கு - நானும்
காத்திருக்கேன் ஊருக்குள்ளே !!
அஷ்பா அஷ்ரப் அலி
அணிலளைந்த செங்கனியோ
கன்றிழந்த காளையைபோல் - எதைநீ
கண்சுழற்றி தேடுகிறாய் !
வண்டினங்கள் வாசல்வழி - தினமும்
வந்துவந்து போகுதடி
பண்பிழந்து போகுமென்றால் - மனசு
புண்தொடுத்து வேகுமடி !
காலமுன்னைக் கொல்லுதென்றால் - நீ
கண்ணசைத்து சொல்லுபுள்ள
ஆதவனைப் போலயிங்கு - நானும்
காத்திருக்கேன் ஊருக்குள்ளே !!
அஷ்பா அஷ்ரப் அலி
திங்கள், பிப்ரவரி 24, 2014
ஞாயிறு, பிப்ரவரி 23, 2014
வியாழன், பிப்ரவரி 20, 2014
அழ வைத்த கண் கொண்டாள் ..
ஆழத்தில் கிடந்தாலும் அன்பே நீயும்
ஆற்றாத துயரந்தான் எந்தன் நெஞ்சில்
மீளத்தான் முடியாதோ மீண்டும் மீண்டும்
முள்ளாகிக் குத்துகிறாய் நெஞ்சில் எங்கும்
காலத்தா லழியாத காதல் என்றன்
வேல்போலுன் உள்ளத்தில் பாய்ந்த தாலோ
மாளத்தான் வீழ்ந்தேனோ உந்தன் கண்ணில்
விளக்கித்தான் சொல்வாயோ விபரம் கூட்டி
கோணத்தில் உன்னெண்ணம் குறுக்கா லோட
கொதிக்கின்ற என்னெண்ணம் தவிக்கு திங்கே
வானத்தின் உயரத்தில் வாழ்ந்தால் நீயும்
வாகாக வாழ்வாய்நீ என்னில் என்றும்
தேனாக சொட்டுகின்ற பெண்கள் கண்ணில்
தேள்போலக் கொட்டுகின்ற கண்கள் உண்டோ
ஆணாகப் பிறந்தோர்க்கு அல்லல் தந்து
அழவைத்த கண்களில்நீ நூற்றில் ஒன்றோ ?
அஷ்பா அஷ்ரப் அலி
ஆற்றாத துயரந்தான் எந்தன் நெஞ்சில்
மீளத்தான் முடியாதோ மீண்டும் மீண்டும்
முள்ளாகிக் குத்துகிறாய் நெஞ்சில் எங்கும்
காலத்தா லழியாத காதல் என்றன்
வேல்போலுன் உள்ளத்தில் பாய்ந்த தாலோ
மாளத்தான் வீழ்ந்தேனோ உந்தன் கண்ணில்
விளக்கித்தான் சொல்வாயோ விபரம் கூட்டி
கோணத்தில் உன்னெண்ணம் குறுக்கா லோட
கொதிக்கின்ற என்னெண்ணம் தவிக்கு திங்கே
வானத்தின் உயரத்தில் வாழ்ந்தால் நீயும்
வாகாக வாழ்வாய்நீ என்னில் என்றும்
தேனாக சொட்டுகின்ற பெண்கள் கண்ணில்
தேள்போலக் கொட்டுகின்ற கண்கள் உண்டோ
ஆணாகப் பிறந்தோர்க்கு அல்லல் தந்து
அழவைத்த கண்களில்நீ நூற்றில் ஒன்றோ ?
அஷ்பா அஷ்ரப் அலி
செவ்வாய், பிப்ரவரி 18, 2014
விழுந்தாலும் மகிழ்வேன் !!
விதிவந்து விளையாடி
விழும்போதும் மகிழ்வேன்
சதிமாந்தர் செய்தெனக்கு
சரிந்தாலும் மகிழ்வேன்
ஊரெல்லாம் சேர்ந்தென்னை
பகைத்தாலும் மகிழ்வேன்
பாரெல்லாம் சேர்ந்தென்னை
வதைத்தாலும் மகிழ்வேன்
கொடியோர்கள் கூடியென்னை
கடிந்தாலும் மகிழ்வேன்
அடியோடு உறவெல்லாம்
வெறுத்தாலும் மகிழ்வேன்
குளிர்காற்று வந்தென்னை
தொட்டாலும் மகிழ்வேன்
கடும் வெயில்வந்து தீயாக
சுட்டாலும் மகிழ்வேன்
ஆவியெந்தன் மேனியிலே
இருந்தாலும் மகிழ்வேன்
சாவுயென்னைத் தேடிவந்து
அழைத்தாலும் மகிழ்வேன் ..
அஷ்பா அஷ்ரப் அலி
விழும்போதும் மகிழ்வேன்
சதிமாந்தர் செய்தெனக்கு
சரிந்தாலும் மகிழ்வேன்
ஊரெல்லாம் சேர்ந்தென்னை
பகைத்தாலும் மகிழ்வேன்
பாரெல்லாம் சேர்ந்தென்னை
வதைத்தாலும் மகிழ்வேன்
கொடியோர்கள் கூடியென்னை
கடிந்தாலும் மகிழ்வேன்
அடியோடு உறவெல்லாம்
வெறுத்தாலும் மகிழ்வேன்
குளிர்காற்று வந்தென்னை
தொட்டாலும் மகிழ்வேன்
கடும் வெயில்வந்து தீயாக
சுட்டாலும் மகிழ்வேன்
ஆவியெந்தன் மேனியிலே
இருந்தாலும் மகிழ்வேன்
சாவுயென்னைத் தேடிவந்து
அழைத்தாலும் மகிழ்வேன் ..
அஷ்பா அஷ்ரப் அலி
சனி, பிப்ரவரி 15, 2014
எப்பக்கம் திரும்புவது ?
எங்கென்று நோக்குவது
எதையெதைநான் நோக்குவது ?
எப்பக்கம் திரும்பினாலும்
ஏராளச் சிக்கல்கள் ..
வாதாட வாய்கொண்டோர்
வாய்கிழிய கத்துவதும்
ஆதாரம் தேடித்தேடி
ஆடிடுவோர் ஒருபக்கம் ..
சூதாட்டம் மதுமங்கை
சொல்லாலே வெறுத்தொதுக்கி
வேதாளம் போல்வாழ்வோர்
வீதியெங்கும் ஒருபக்கம் ..
எண்ணத்தில் ஒன்றுவைத்து
எழிலோடு புன்னகைத்து
வன்மனமாய் வாழ்ந்திடுவோர்
வாசலெங்கும் ஒருபக்கம் ..
எண்ணற்ற வாக்குறுதி
எத்தனையோ அள்ளிவீசி
கண்கெட்ட அரசியலில்
கால்வைத்தோர் ஒருபக்கம் ..
நிந்திப்போர் உள்ளவரை
எந்தவிதப் பயனுமில்லை
வந்துவந்து போகுமிந்த
சிந்தனையோ ஒருபக்கம் ..
அஷ்பா அஷ்ரப் அலி
எதையெதைநான் நோக்குவது ?
எப்பக்கம் திரும்பினாலும்
ஏராளச் சிக்கல்கள் ..
வாதாட வாய்கொண்டோர்
வாய்கிழிய கத்துவதும்
ஆதாரம் தேடித்தேடி
ஆடிடுவோர் ஒருபக்கம் ..
சூதாட்டம் மதுமங்கை
சொல்லாலே வெறுத்தொதுக்கி
வேதாளம் போல்வாழ்வோர்
வீதியெங்கும் ஒருபக்கம் ..
எண்ணத்தில் ஒன்றுவைத்து
எழிலோடு புன்னகைத்து
வன்மனமாய் வாழ்ந்திடுவோர்
வாசலெங்கும் ஒருபக்கம் ..
எண்ணற்ற வாக்குறுதி
எத்தனையோ அள்ளிவீசி
கண்கெட்ட அரசியலில்
கால்வைத்தோர் ஒருபக்கம் ..
நிந்திப்போர் உள்ளவரை
எந்தவிதப் பயனுமில்லை
வந்துவந்து போகுமிந்த
சிந்தனையோ ஒருபக்கம் ..
அஷ்பா அஷ்ரப் அலி
வியாழன், பிப்ரவரி 13, 2014
வற்றா நதியென நீயுண்டு !!
வானும் கடலும் நமக்கென்றால் - என்
வற்றா நதியென நீயிருக்க
காணும் காட்சி பலவிருந்தும் - நான்
கண்டே மகிழ்ந்திட நீயாகி
தேனும் பாலுஞ் சுவைகொண்டு - தினம்
சேர்ந்தே மகிழ்ந்திட நீயுண்டு !
ஆற்றாத் துயரம் எனில்காண - எனை
தேற்றித் தழுவிட எனக்கென்றும்
காற்றாய் மழையாய் வகைகொண்டு - என்
காலம் கனிந்திட தினமென்றும்
ஊற்றாய் பெருகிடும் உணர் (வு ) கண்டு - தினம்
உவகை பொங்கிட நீயுண்டு !
காதல் கீதம் பல உண்டு - அதை
காதில் இசைத்திட நீயுண்டு
தோதாய் உன்னில் எனைகொண்டு - நான்
தாழா திருக்க நீயுண்டு
சாதல் எவர்க்கும் பொதுவுண்டு - என்
சாகா வரமாய் நீயுண்டு !
அஷ்பா அஷ்ரப் அலி
வற்றா நதியென நீயிருக்க
காணும் காட்சி பலவிருந்தும் - நான்
கண்டே மகிழ்ந்திட நீயாகி
தேனும் பாலுஞ் சுவைகொண்டு - தினம்
சேர்ந்தே மகிழ்ந்திட நீயுண்டு !
ஆற்றாத் துயரம் எனில்காண - எனை
தேற்றித் தழுவிட எனக்கென்றும்
காற்றாய் மழையாய் வகைகொண்டு - என்
காலம் கனிந்திட தினமென்றும்
ஊற்றாய் பெருகிடும் உணர் (வு ) கண்டு - தினம்
உவகை பொங்கிட நீயுண்டு !
காதல் கீதம் பல உண்டு - அதை
காதில் இசைத்திட நீயுண்டு
தோதாய் உன்னில் எனைகொண்டு - நான்
தாழா திருக்க நீயுண்டு
சாதல் எவர்க்கும் பொதுவுண்டு - என்
சாகா வரமாய் நீயுண்டு !
அஷ்பா அஷ்ரப் அலி
புதன், பிப்ரவரி 12, 2014
ஆட்டம் போடும் மனிதன் !!
தேனருந்தும் வண்டினமோ மலர்களோடு கொஞ்சும்
தேனிழக்கும் நிலையறிந்து மலர்களதும் கெஞ்சும் !
கானகத்து நடுவில்நின்று கோலமயில் ஆடும்
கண்டதனில் களிப்புற்று கானக்குயில் பாடும் !
ஊனமுற்றோர் உலகெங்கும் குமுறிமனம் துடிப்பார்
உதவிடநல் கரங்கொண்டோர் வேதம்தினம் படிப்பார் !
மானமதை இழந்தவராய் மாக்களவர் கூட்டம்
மமதையுடன் போடுகின்றார் மண்ணிலிங்கு ஆட்டம் !
வேரறுந்த உறவுகளே ஊர்நிறைந்து வாழும்
பார்தொடுத்த போரினைப்போல் உறவுமுறை சூழும் !
தாரமதை தள்ளிவைத்து தனதின்பம் சேர்ப்பார்
தள்ளாடும் நிலைவரவே தாரம்கரம் கோர்ப்பார் !
அஷ்பா அஷ்ரப் அலி
தேனிழக்கும் நிலையறிந்து மலர்களதும் கெஞ்சும் !
கானகத்து நடுவில்நின்று கோலமயில் ஆடும்
கண்டதனில் களிப்புற்று கானக்குயில் பாடும் !
ஊனமுற்றோர் உலகெங்கும் குமுறிமனம் துடிப்பார்
உதவிடநல் கரங்கொண்டோர் வேதம்தினம் படிப்பார் !
மானமதை இழந்தவராய் மாக்களவர் கூட்டம்
மமதையுடன் போடுகின்றார் மண்ணிலிங்கு ஆட்டம் !
வேரறுந்த உறவுகளே ஊர்நிறைந்து வாழும்
பார்தொடுத்த போரினைப்போல் உறவுமுறை சூழும் !
தாரமதை தள்ளிவைத்து தனதின்பம் சேர்ப்பார்
தள்ளாடும் நிலைவரவே தாரம்கரம் கோர்ப்பார் !
அஷ்பா அஷ்ரப் அலி
திங்கள், பிப்ரவரி 10, 2014
வையம் எங்கும் அமைதி இல்லை !!
வானில் தேய்ந்த இளநிலவும் - அதன்
வடிவம் வளர அமைதிபெறும்
தேனில் அளையும் வண்டினமும் - தன்
தேவைக் கேற்ப தேனுறிஞ்சும்
வீணில் அலையும் மனிதமனம் - ஏனோ
விருப்பம் நிறைந்தும் ஓய்வதில்லை !
விளங்கா வாழ்வில் வாழுமவன் - தினம்
வீணாய் வாழ்வைக் கழிக்கின்றான்
விளக்கின் ஒளியில் வந்துவிழும் - அவ்
விட்டில் போலச் சுருளுகின்றான்
கலங்கித் தவிக்கும் கண்கண்டும் - அவன்
காணா திருந்தே மாளுகின்றான் !
பகுக்கும் அறிவு கொண்டோனாய் - பாரில்
பரமன் படைத்த மனிதஇனம்
ஆகும் கலகக் கும்பல்களால் - தினம்
அழிந்தே மடியுது அனுதினமும்
வகுப்பென வாழும் இழிநிலையில் - இந்த
வையம் எங்கும் அமைதிஇல்லை !!
அஷ்பா அஷ்ரப் அலி
வடிவம் வளர அமைதிபெறும்
தேனில் அளையும் வண்டினமும் - தன்
தேவைக் கேற்ப தேனுறிஞ்சும்
வீணில் அலையும் மனிதமனம் - ஏனோ
விருப்பம் நிறைந்தும் ஓய்வதில்லை !
விளங்கா வாழ்வில் வாழுமவன் - தினம்
வீணாய் வாழ்வைக் கழிக்கின்றான்
விளக்கின் ஒளியில் வந்துவிழும் - அவ்
விட்டில் போலச் சுருளுகின்றான்
கலங்கித் தவிக்கும் கண்கண்டும் - அவன்
காணா திருந்தே மாளுகின்றான் !
பகுக்கும் அறிவு கொண்டோனாய் - பாரில்
பரமன் படைத்த மனிதஇனம்
ஆகும் கலகக் கும்பல்களால் - தினம்
அழிந்தே மடியுது அனுதினமும்
வகுப்பென வாழும் இழிநிலையில் - இந்த
வையம் எங்கும் அமைதிஇல்லை !!
அஷ்பா அஷ்ரப் அலி
ஞாயிறு, பிப்ரவரி 09, 2014
வெள்ளி, பிப்ரவரி 07, 2014
விளக்கேற்ற வந்து விடு !!
ஆழ்கடலில் ஆழ்ந்தெடுத்த முத்துக் கண்ணில்
அஞ்சனங்கள் சூழ்ந்துநின்ற அழகைக் கண்டேன்
மூழ்கிடத்தான் பாவிமனம் அங்கங் கண்டு
முழுநிலவாய் வதனமதும் ஒளிரக் கண்டேன் !
கார்குழல்போல் கருங்கூந்தல் களைந்து ஆட
கன்னியவள் கால்களதோ நடையும் பயில
வார்த்தெடுத்த சிலையதுபோல் வனப்பில் மின்னும்
வஞ்சியவள் கன்னத்தின் குழியும் பேசும் !
மங்கையவள் கொங்கையதும் மலரக் கண்ணில்
மதிமயங்கி மடல்திறக்கும் மாயக் கனவும்
தங்கமென வார்த்தெடுத்த தளிரும் மேனி
தடையகற்றி தழுவிடவே எண்ணம் தோன்றும் !
பூவிதழில் பூத்துநின்ற புன்னகையோ அன்றி
புதுநாதம் பிறக்கின்ற பூங் குழலோ
ஆவியெந்தன் பிரிந்தாலும் அழகுக் கிளியின்
அமுதவிதழ் அவிழ்த்துவிடத் தானே ஏக்கம் !
வேல்விழியாள் விளக்கேற்ற வந்தால் என்றன்
வாழ்வினிலும் வாசலிலும் சுடராய் ஒளிரும்
பால்பொழியும் வதனமவள் பார்த்துப் பார்த்தே
பசியாறிப் போவதுண்மை விடியல் தோறும் !!
அஷ்பா அஷ்ரப் அலி
அஞ்சனங்கள் சூழ்ந்துநின்ற அழகைக் கண்டேன்
மூழ்கிடத்தான் பாவிமனம் அங்கங் கண்டு
முழுநிலவாய் வதனமதும் ஒளிரக் கண்டேன் !
கார்குழல்போல் கருங்கூந்தல் களைந்து ஆட
கன்னியவள் கால்களதோ நடையும் பயில
வார்த்தெடுத்த சிலையதுபோல் வனப்பில் மின்னும்
வஞ்சியவள் கன்னத்தின் குழியும் பேசும் !
மங்கையவள் கொங்கையதும் மலரக் கண்ணில்
மதிமயங்கி மடல்திறக்கும் மாயக் கனவும்
தங்கமென வார்த்தெடுத்த தளிரும் மேனி
தடையகற்றி தழுவிடவே எண்ணம் தோன்றும் !
பூவிதழில் பூத்துநின்ற புன்னகையோ அன்றி
புதுநாதம் பிறக்கின்ற பூங் குழலோ
ஆவியெந்தன் பிரிந்தாலும் அழகுக் கிளியின்
அமுதவிதழ் அவிழ்த்துவிடத் தானே ஏக்கம் !
வேல்விழியாள் விளக்கேற்ற வந்தால் என்றன்
வாழ்வினிலும் வாசலிலும் சுடராய் ஒளிரும்
பால்பொழியும் வதனமவள் பார்த்துப் பார்த்தே
பசியாறிப் போவதுண்மை விடியல் தோறும் !!
அஷ்பா அஷ்ரப் அலி
செவ்வாய், பிப்ரவரி 04, 2014
அண்டியே வாழ்வோம் என்றும் !!
மண்டலம் வாழ்வோ ரெல்லாம்
முண்டமாய் ஆன தால்தான்
கண்படும் தூர மெல்லாம்
வன்முறை துளிர்த்த தெங்கும் !
அண்டமே சூழ்ந்து நின்ற
அமைதியின் வாடை நீங்கி
பண்டைய இனிமை இன்றி
புண்படும் வாழ்வு கண்டோம் !
கண்டனக் குரல் கொடுப்போர்
தண்டமே என வளைந்து
மண்ணினில் குவிந்த தால்தான்
மகிழ்வினை இழந்து விட்டோம் !
மாண்டிடச் செய்வோம் அந்த
மானுடம் வெறுக்கும் தொல்லை
அண்டியே வாழ்வோம் எங்கும்
அன்பெனும் கரங்கள் கோர்த்து !
அஷ்பா அஷ்ரப் அலி
முண்டமாய் ஆன தால்தான்
கண்படும் தூர மெல்லாம்
வன்முறை துளிர்த்த தெங்கும் !
அண்டமே சூழ்ந்து நின்ற
அமைதியின் வாடை நீங்கி
பண்டைய இனிமை இன்றி
புண்படும் வாழ்வு கண்டோம் !
கண்டனக் குரல் கொடுப்போர்
தண்டமே என வளைந்து
மண்ணினில் குவிந்த தால்தான்
மகிழ்வினை இழந்து விட்டோம் !
மாண்டிடச் செய்வோம் அந்த
மானுடம் வெறுக்கும் தொல்லை
அண்டியே வாழ்வோம் எங்கும்
அன்பெனும் கரங்கள் கோர்த்து !
அஷ்பா அஷ்ரப் அலி
ஞாயிறு, பிப்ரவரி 02, 2014
இறைவனைப் புகழ்வாய் !!
வற்றா நதியென வளமளித்து
வாழும் உயிருக் குணவளிக்கும்
ஏற்றங் கொண்ட இறையோனை
என்றும் துதிப்போர் இங்கில்லை !
போற்றா திருப்போர் ஒருபாதி
பொல்லா துள்ளம் மறுபாதி
ஏற்றத் தாழ்வு என்றி ன்றி
ஏந்திடும் அவனை நினைப்பதில்லை !
ஆற்றாத் துயரம் சூழ்கையிலே
ஆயிர மாயிரம் அவ (ன் ) னினைவு
ஆற்றலில் அவனின் வல்லமையை
ஆழ்ந்தே நோக்கிடக் கண்களில்லை !
வேற்றுமை அகற்றி உயிர்கட்கு
வேண்டுவ தெல்லாம் அளிப்பவனே
ஆற்றல் கொண்ட உன்னன்பால்
அளக்கும் படியிலும் குறைவில்லை !
காற்றால் மழையால் கதிரொளியால்
காலச் சுழற்சியில் எமைகாக்கும்
ஏற்றம் பெற்ற உனையன்றி
ஏகன் வேறு எமக்கில்லை !!
அஷ்பா அஷ்ரப் அலி
வாழும் உயிருக் குணவளிக்கும்
ஏற்றங் கொண்ட இறையோனை
என்றும் துதிப்போர் இங்கில்லை !
போற்றா திருப்போர் ஒருபாதி
பொல்லா துள்ளம் மறுபாதி
ஏற்றத் தாழ்வு என்றி ன்றி
ஏந்திடும் அவனை நினைப்பதில்லை !
ஆற்றாத் துயரம் சூழ்கையிலே
ஆயிர மாயிரம் அவ (ன் ) னினைவு
ஆற்றலில் அவனின் வல்லமையை
ஆழ்ந்தே நோக்கிடக் கண்களில்லை !
வேற்றுமை அகற்றி உயிர்கட்கு
வேண்டுவ தெல்லாம் அளிப்பவனே
ஆற்றல் கொண்ட உன்னன்பால்
அளக்கும் படியிலும் குறைவில்லை !
காற்றால் மழையால் கதிரொளியால்
காலச் சுழற்சியில் எமைகாக்கும்
ஏற்றம் பெற்ற உனையன்றி
ஏகன் வேறு எமக்கில்லை !!
அஷ்பா அஷ்ரப் அலி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)