அவனிவந்த மதங்கள் எல்லாம்
அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
அமைதி கண்டது - எங்கும்
இமைகள் திறந்தது
தவமிருந்து வளர்ந்த மதம்
தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
தனித்து வளருது - ஏனோ
தொனியைத் தூக்குது
வேதமோதும் குருக்கள் இங்கு
வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
வாசம் வருகுது - எங்கோ
மோசம் நடக்குது
பிணங்கள் உண்ணும் மிருகமாகி
போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
பகையை வளர்க்கிறான் - ஊதி
புகையை வார்க்கிறான்
உயர்ந்து நிற்கும் வேதமிதும்
உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
உணரும் நாள்வரும் - கூட
திணறும் நாள்வரும்
இன்னல் படும் இனத்தவரே
இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
சிந்தி நிற்பதேன்
வேதம் சொன்ன வாக்குகளில்
வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
வளைந்து நிற்பதேன் - நிலையில்
குலைந்து நிற்பதேன்
அஷ்பா அஷ்ரப் அலி
அன்பைத் தெளித்தது - அதன்
அழகில் நின்று வளர்ந்ததாலே
அமைதி கண்டது - எங்கும்
இமைகள் திறந்தது
தவமிருந்து வளர்ந்த மதம்
தளிர்த்து நிற்குது - அதில்
தறுதலையாய் வளர்ந்த கிளை
தனித்து வளருது - ஏனோ
தொனியைத் தூக்குது
வேதமோதும் குருக்கள் இங்கு
வாதம் கொள்வதால் - நாட்டில்
வேதனையின் தீ பரவும்
வாசம் வருகுது - எங்கோ
மோசம் நடக்குது
பிணங்கள் உண்ணும் மிருகமாகி
போதன் நிற்கிறான் - மோதிப்
பிணக்குகளால் இனங்கள் இடை
பகையை வளர்க்கிறான் - ஊதி
புகையை வார்க்கிறான்
உயர்ந்து நிற்கும் வேதமிதும்
உணர்வ தில்லையோ - உலகில்
உருவமற்ற இறையின் வேதம்
உணரும் நாள்வரும் - கூட
திணறும் நாள்வரும்
இன்னல் படும் இனத்தவரே
இடிந்து கிடப்பதேன் - பிரிந்து
இயக்கம் இயக்கம் இயக்கமென
சிதறிக் கிடப்பதேன் - மூக்கை
சிந்தி நிற்பதேன்
வேதம் சொன்ன வாக்குகளில்
வாதம் வைப்பதேன் - சேர்ந்து
வாசலுக்கு ஒன்று என்று
வளைந்து நிற்பதேன் - நிலையில்
குலைந்து நிற்பதேன்
அஷ்பா அஷ்ரப் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக