செவ்வாய், ஏப்ரல் 26, 2016

அறுசீர் விருத்தம் !

கருவறை தொட்டுக் கல்லறை வரையுங்
களிப்பினில் வாழ்வதற்கே
விரும்பிய படியே வாழ்ந்திடு  வென்று
விழிகளைப் படைத்தவனாம்
தரும்வளம் யாவும் தரையினி லிங்கே
தரமெனத் தந்தவனாம்
அருள்மிகு இறைவன் ஆற்றலை இங்கு
அறிந்திட  ஆளிலையே !

கருத்துகள் இல்லை: